Tamil quotes (love quotes in tamil)

There is collection of tamil quotes on this website. There is collection of love quotes in tamil and motivational qoutes in tamil.
Tamil quotes, love quotes in tamil
Tamilsms.blog

Tamil motivational quotes

தனியே நின்றாலும்
தன் மானத்தோடு...
சுமையான பயணமும்
சுகமாக....
(நம்பிக்கை)

எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...

தோல்விகளை
தவழும் போது,
ஏமாற்றமென
நினையாமல்
மாற்றமென
நினையுங்கள்...
பாதிப்பு
இருக்காது...
உங்களுக்கும்
மனதிற்க்கும்...
இதுவும் கடந்து போகும்

ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டே
ன் என்று
முதலடி எடுத்து வை
இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்

Download Tamil movies/ Tamilgun.com

அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்

தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்

வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!
வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்

வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது

உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை

தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்
எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)

நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது

எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)

விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே
வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி

தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்...
(தெளிவும்-நம்பிக்கையும்)

எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்

அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது...

நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக...

முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது

விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்...

வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே...
(நம்பிக்கையுடன்)

உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!

வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(உழைப்பே - உயர்வு)

முடியாது
என எதையும்
விட்டு விடாதே...!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்...

தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...

அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்...

உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...

எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்......

குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......

ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...

தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு...

எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்...

நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்...

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...

தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...

ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்..

எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு...

எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்....
( நம்பிக்கை )

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே...


Love quotes in tamil

எழுதவில்லை
செதுக்குகிறேன்
உனக்கான கவிதையை
என் இதயத்தில்

மரணத்தை கொடுத்துவிடு
ஒரு நொடி வலி
மௌனத்தை கொடுக்காதே
ஒவ்வொரு நொடியும் மரண வலி

பார்வையில் மனதை
பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்...

சுழற்றியடிக்கும்
காற்றையும் எதிர்த்து
சுடர்விட்டெரிகிறது
அகல்விளக்கு....
பல ஆசைகளுடன்
என்னைப்போலவே
உன்னை வரவேற்க

அன்பு காட்டுவதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பதும்
எனக்கு வெற்றியே...

இளகாத
உன் மனதால்
மெழுகாக
நானுருகி
வரிகள் பல
வடிக்கின்றேன்
கற்பனையில்
காதல் செய்து

உன் தேடல் நானென்றால்
தொலைவதும்
ஒரு சுகமே

மயக்கும்
மல்லிகையை
கையில்கொடுத்து
மனதில்.....
அணையா
ஆசையை
மூட்டிச்சென்றான்
வரிகளில்லா
அழகிய கவிதை
உன் விழிகளில் ரசித்தேன்...

அங்கே உன்
நிலையென்ன....என்ற
நினைப்பிலேயே
என் நிமிடங்கள்
நகர்ந்துக்கொண்டிருக்கு

உன்
தொடரலே
என்
உலகத்தை
அழகாக்குகின்றது

பூவுக்குள்ளும்
பூத்திருக்கின்றது
உன்
காதல்
வாசனை

வேள்வியின்றி
எரிகின்றேன்
உன் விழித்
தீயில்

நம்
வாழ்க்கையை
வண்ணமாக்க....
உன்
கையை
தூரிகையாக்கினாய்

ஒற்றை
விழியில்
நோக்கினாலும்
எங்கும் நீயே
என்
இருவிழிகளாய்

நீ
தாமதிக்கும்
ஒவ்வொரு
நொடியும்
கடிகாரமுள்ளைவிட
அதிவேகமாகவே
துடிக்கின்றது
என்
இதயம்

நீ
பொய்யாக
வர்ணிக்கும்
போதெல்லாம்.....
நாணம்
என்னை
மெய்யாகவே
அழகாக்குகின்றது

என்னைப்பற்றிய
கவலைகள்
எனக்கில்லை
அக்கறைக்கொள்ள
நீயிருப்பதால்......

கடற்கரையில்
கால் பதித்தேன்
உன் நினைவுகளும்
ஒட்டிக்கொண்டது...

தனிமையில்
பயணங்கள்
களைத்ததில்லை
துணையாக
உன்
நிழல்
இருப்பதால்...

சிந்திக்க
பலயிருந்தாலும்
முந்திக்கொள்கின்றாய்..நீ

காவலன்
நீயானாய்
கைதி
நானானேன்

தள்ளாடிப்
போகின்றேன்.....
தென்றலில்
தள்ளாடும்
கூந்தலைப்போல்
உன்
கரம்
கன்னத்தில்பட

நீ
ரசிக்க
நானும் ஒரு
சிலையானேன்

முடியாத பயணம்
நான் தொடர வேண்டும்
உன் கரம் பிடித்து...

வெறுமையான
வாழ்க்கையும்
வசந்தகாலமானது
உன்னால்....

கடவுளை
அழைத்தேன்
காட்சித் தரவில்லை
என்னவரை
நினைத்தேன்
கண்ணெதிரே
தோன்றினார்

மொத்தமாய்
உன்
அன்பு
என்னை
ஆதிக்கம் செய்ய
சுத்தமாய்
மாறிப்போனேன்
நானும்

என் பிழைகளை
திருத்தும்
பிழையில்லா
கவிதை ... நீ

இதயக்கதவை
உன் நினைவுகள்
தட்ட........
எட்டிப்பார்கின்றது
விழிகளும்
நீ வரும்
வழியை நோக்கி.......

எரிக்கும் உன்
பார்வைத்தீயில்
உருகும்
மெழுகாய் நான்....

விரும்பியே
தொலைகின்றேன்
விலகிவிடாதே...

காதலின்
பிடியில்
சிக்கித் தவித்த
மலருக்கும்
ஆசை வந்தது
மரணிக்காமல்
வாழ......

சிறு ஊடல்
ஒரு காத்திருப்பில்
வளர்கிறது காதல்

மனதை
மயக்குகின்றாய்
மருதாணி
வாசனையாய்.....
என்னை
மௌனமாக்கி
நீ
விழியில்
பேசியே
வென்றுவிடுகிறாய்

மின்னலாய்
நீ வர
மழைச்சாரல்
மனதுக்குள்

உன்
மொழியில்லா
ஆறுதலில்
எனை
மறந்துப்போனேன்

முழுதாய்
மறைவதற்குள்
நிலவு விழித்துக்கொள்வதென்ன
உன் நினைவு
 Note:- some of these tamil qoutes are owned byTamil Sms

Post a Comment

0 Comments